Sunday, August 19, 2007

மீண்டும் வணக்கம்

வலைப்பதிவு நண்பர்களுக்கு

முன்னர் yarl.net சேவை வழங்கியில் ஒரு வலைப்பதிவை வைத்திருந்தேன். சேவை வழங்குனர்கள் தமது சேவையை இடை நிறுத்தி கொண்டதால் தொடர்ந்தும் எனது வலைப்பதிவை பேண முடியவில்லை. அத்துடன் வலைப்பதிவு எழுதுவதில் ஏற்பட்ட சோர்வும் என்னை தொடர்ந்து எழுதவிடாமல் செய்துவிட்டது. இருந்தபோதும் தொடர்ந்து வலைப்பதிவுகளை வாசித்துவருவது வழமை. சில சமையங்களில் பின்னூட்டமும் இடுவதுண்டு. இன்று தமிழ்சசியின் வலைப்பதிவில் எனது பெயரில் ஒரு பின்னூட்டம் வந்திருந்ததை பார்த்த போது ஆச்சரியமாக இருந்ததது. ஏன் எனில் நான் வலைப்பாதிவில் அதிகம் அறியபடாத/ அல்லது மறக்கப்பட்ட ஒரு வலைப்பதிவர். எனது பெயரிலும் போலி பின்னூட்டமா? தொடர்ந்தும் எனது பெயரில் போலி பின்னூட்டம் வரலாம் வராமலும் இருக்கலாம். போலி பின்னூட்டம் வரும் போது முன்னர் என்னுடன் பரிச்சயமாக இருந்த வலைப்பதிவர்கள் நான் என தப்பாக நினைக்ககூடும் என்பதாலேயே மீளவும் வலைப்பதிவை தொடங்கியுள்ளேன்.

நட்புடன்
குழைக்காட்டான்

0 comments: